ரூ.500 செலுத்தினால் போதும்..!! ரூ.5 லட்சம் பெறலாம்..!! ஆண் குழந்தைகளுக்கான போஸ்ட் ஆபிஸ் திட்டம்..!!

ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.


பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் என்பது செப்டம்பர் 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம் ஆண் குழந்தைக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இதில், தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே சேர முடியும்.

பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

* 10 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது Guardian கணக்கைத் திறக்கலாம்.

* குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ.500 மற்றும் அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சம்.

* பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆகும்.

* திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்த 5 ஆண்டுகளை தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம்.

* சம்பாதித்த வட்டி உட்பட முழுத் தொகையும் மேஜர் ஆனவுடன் ஆண் குழந்தைக்கு வழங்கப்படும்.

பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்ட கணக்கை எவ்வாறு திறப்பது..?

* தமிழ்நாட்டில் உள்ள ஒரு தபால் நிலையத்தை அணுகவும்.

* திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

* குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்/பாதுகாவலரின் அடையாளச் சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

* ஆரம்ப வைப்புத்தொகை ரூ.500

* கணக்கு திறக்கப்பட்டு குழந்தைக்கு பாஸ்புக் வழங்கப்படும்.

பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் ஒரு எளிய மற்றும் எளிதாக திறக்கக்கூடிய சேமிப்பு திட்டமாகும். தங்கள் மகனின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோருக்கு இது ஒரு நல்ல வழி. இத்திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வீதம், வருடத்திற்கு 12,000 ரூபாய் முதலீடு செய்தால், வட்டி விகிதம் 7.6%. அதனடிப்படையில் 15 ஆண்டுகள் இத்திட்டத்தில் 1,80,000 ரூபாய் முதலீடு செய்தால் 3,47,441 ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். மொத்தத்தில் முதிர்வு தொகை 5,27,446 ரூபாய் கிடைக்கும். இந்த தகவலை பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

CHELLA

Next Post

மக்களே..!! இன்று முதல் ரயில் நிலையங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்..!! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!!

Tue May 23 , 2023
நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடந்தனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2000 புதிய நோட்டை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 6 வருடங்களாக […]
Train 1 1

You May Like