புதிய புதிய FASTag விதிகளின்படி ரூ.3000 ரீசார்ஜ் செய்து வருடம் முழுவதும் 200 முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.
சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்துகின்றனர். புதிய கொள்கையின் கீழ், வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி ஆண்டு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியும்.
இந்த அமைப்பு சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, எரிபொருளையும் மிச்சப்படுத்தும். கார் வேன் போன்ற வர்த்தகம் சாராத தனி நபர் வாகனங்களுக்கு மட்டும் புதிய பாஸ்ட் டேக் விதி பொருந்தும். புதிய கொள்கையின் கீழ், வாகன உரிமையாளர்கள் ஆண்டுதோறும் ரூ.3000 செலுத்துவதன் மூலம், தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் எத்தனைமுறை வேண்டுமானாலும் பயணிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாஸ் FASTag கணக்குடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படும், இதன் காரணமாக மக்கள் மீண்டும் மீண்டும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த புதிய விதிகள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.3000 ரீசார்ஜ் செய்து வருடம் முழுவதும் 200 முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.
புதிய FASTag முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மக்கள் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள வேண்டியதில்லை, மேலும் மக்கள் எரிபொருளையும் சேமிப்பார்கள். இந்த புதிய முறையின் உதவியுடன், சுங்க வரி வருவாய் ஈடுசெய்யப்படும் மற்றும் மோசடி குறைக்கப்படும். அதே நேரத்தில், சுங்கக் கொள்ளையைத் தடுக்க வங்கிகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும்.
Read more: இதுவரை 585 பேர் பலி.. உச்சகட்டத்தை எட்டும் இஸ்ரேல் – ஈரான் மோதல்..!!