தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள், தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கொள்கை ரீதியான விமர்சனங்களை தாண்டி, தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கங்கள் குறித்துப் பொதுவெளியில் தரம் தாழ்ந்த முறையில் பேசியது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் நாகரிகத்தையும், மனித மாண்புகளையும் காக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்றும், இது போன்ற தனிநபர் தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை என்று கூறியுள்ளார்.
Read More : மதுப்பிரியர்கள் ஷாக்..!! தமிழ்நாடு முழுவதும் பிப்.17ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலவரையின்றி மூடல்..!!


