கையில் கிளாஸுடன் பர்த்டே கொண்டாடிய பிக்பாஸ் ரச்சிதா..! வைரலாகும் வீடியோ

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் அறிமுகமானவர் தான்  ரச்சிதா மகாலட்சுமி.

பின்னர் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகர்  ரியோவுக்கு ஜோடியாக மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின்னர்  நாம் இருவர்  நமக்கு இருவர் தொடரில் நடித்த ரச்சிதா, அந்த தொடர் முடிந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது  சீசனில் ரச்சிதா  போட்டியாளராக கலந்து கொண்டபோது , அதில் ராபர்ட் மாஸ்டர் அவரை காதலித்தது இணைத்தில் வைரலானது. ஆனால், ரச்சிதாவுக்கு ஏற்கனவே சீரியல் நடிகர் தினேஷ்  உடன் திருமணமாகி தற்போது இருவரும் மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து செய்யாமலேயே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்  சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழில் நடிகை ரச்சிதா நடிப்பில் தற்போது ஃபயர் திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

இப்படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சாக்‌ஷி அகர்வால், சாந்தினி, சுரேஷ் சக்ரவர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர  பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை ஜே.எஸ்.கே இயக்கி உள்ளார். இந்நிலையில், தன்னுடைய  பிறந்தநாளை தன்னுடைய வீட்டில் தனது  தாயாருடன் கொண்டாடி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி  தன்னுடைய  புது வீட்டில் தான் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்றும், பிறந்த நாளன்று ஒயின் குடித்தபடி போஸ் கொடுத்து பாடல் கேட்டப்படி காணொளியொன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

HBD Sachin | கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்..!! சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்தநாள்..!!

shyamala

Next Post

தனியுரிமைக்காக வாட்ஸ்அப்பை மக்கள் பயன்படுத்துகிறார்கள்..! "இந்தியாவை விட்டு வெளியேறுவோம்" வாட்ஸ்அப் வழக்கின் முழு விவரம்..!

Fri Apr 26 , 2024
மத்திய அரசின் புதிய IT விதிகளுக்கு எதிரான விசாரணையில், குற்ற வழக்கு விசாரணைக்காக அரசு கேட்கும் பட்சத்தில் பயனரின் தகவலை வாட்ஸப் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை பாதிக்கும் வகையில் end-to-end encryption-ஐ உடைக்க இந்திய காட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டே வெளியேற நேரிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. வாட்ஸ்அப் வழக்கு என்ன?வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா தகவல் […]

You May Like