டிஜிட்டல் தளங்கள் மூலம் குற்றச் செயல்கள் எவ்வளவு அமைதியாகப் பரவுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ரூ.2000-க்காக தம்பதி, ஒரு தம்பதி தங்கள் தனிப்பட்ட உடலுறவுத் தருணங்களை லைவ் வீடியோவில் ஒளிபரப்பினர். இந்த சம்பவம் அனைத்தும் அவர்கள் வீடிலிருந்தே நடைபெற்று வந்தது.
இன்றைய காலக்கட்டத்தில், சாதாரணமாகத் தெரியும் பலரும் – வேகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டிய ஆசையில், ஆபத்தான வழிகளில் பயணிக்கத் தொடங்குகிறார்கள். இந்த வழிகள் ஒருமுறை அடியெடுத்தால், அதிலிருந்து திரும்புவது கடினமானதாக மாறிவிடுகிறது. ஒரு தம்பதியும் இதேபோன்று ஒரு மிக அதிர்ச்சிக்கரமான காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் விர்சுவல் உலகத்தில் குற்றச்செயல்கள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளன என்பதை வலியுறுத்துகிறது. இங்கே, ஒரு கணவன் மற்றும் மனைவி இணைந்து, ஒரு பரிதாபகரமான மற்றும் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து, ஒரு மொபைல் செயலியின் மூலமாக, தங்கள் உடலுறவுத் தருணங்களை நேரடி ஒளிபரப்பு செய்துள்ளனர். ஹைதராபாத், அம்பர்பெட் பகுதியில் உள்ள மல்லிகர்ஜுன் நகர் பகுதியில் போலீசின் East Zone Task Force வின்டோ திடீரென ஒரு வீட்டினை சோதனை செய்தது.
அந்த வீட்டில் உயர்தர கேமராக்கள், ரெக்கார்டிங் சாதனங்கள், மற்றும் இருந்த மற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் live streaming-க்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. இது எந்த ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பும் அல்ல. மறுபுறம், இது குற்றத்தை வெளிப்படுத்தும் பணியில், போலீசாரின் மேற்கொண்ட ஒரு திடீர் நடவடிக்கையாக இருந்தது.
விசாரணையின் போது, அந்த வீடு ஒரு டாக்ஸி ஓட்டுநருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. காவல்துறையினரின் கூற்றுப்படி, விரைவாக அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் டாக்ஸி ஓட்டுநரும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து லைவ் வீடியோவில் தங்களது உடலுடறு காட்சிகளை ஒளிபரப்பு செய்தனர். தம்பதியினர் இந்த வேலையை வேண்டுமென்றே தொடங்கியதாகவும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப வீடியோவை வழங்கியதாகவும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
விர்சுவல் உலகின் இருண்ட பக்கம்: இன்று, டிஜிட்டல் உலகம் ஒருவகையில் அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்த முன்னேற்றத்துடன், அதனைப் பயன்படுத்தும் விதம் எவ்வாறு கெட்ட முயற்சிகளுக்கு வழிகாட்டுகிறது என்பதும் முக்கியம். அந்தவகையில், தம்பதிகள் தங்களது உண்மையான அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் அடையாளத்தை மறைக்க முகமூடிகளைப் பயன்படுத்தியதாக தம்பதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையெல்லாம் அவர்கள் HD கேமராக்களில் பதிவு செய்து, பின்னர் மொபைல் செயலிகள் மூலம் விற்பனை செய்தனர்.
லைவ் வீடியோவுக்கு ரூ.1000 – 2000 ரூபாய் வரை: நேரடி வீடியோக்களுக்கு இவர்கள் இரண்டாயிரம் ரூபாய் வசூலித்ததாக போலீசார் தெரிவித்தனர். அதேசமயம், பதிவு செய்யப்பட்ட கிளிப்களின் விலை 500 ரூபாய். பணம் செலுத்தத் தயாராக உள்ளவர்களுக்கு இந்த வீடியோக்கள் செயலிகள் மூலம் அனுப்பப்பட்டன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் மூலம் அந்த நபர், டாக்ஸி ஓட்டுவதில் கிடைக்கும் தனது வருமானத்தை விட இதில் அதிகமாக பணம் சம்பாதித்து வந்ததுதான். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முழு மோசடி குறித்தும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Readmore: அண்ணாமலை பாஜக தேசியப் பொதுச் செயலாளராக தேர்வு…! தொண்டர்கள் வாழ்த்து…!