கர்நாடகாவில் இன்று காலை 7 முதல் 6 மணி வரை வாக்கு பதிவு…! 11,617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை…!

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. மாநிலத்தில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5,000 பேரும் உள்ளனர்.


தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 58, 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11, 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன‌. தேர்தல் பணியில் 3,51, 153 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த ரூ.375.61 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்...! கடந்த 2018-ஐ விட 4.5 மடங்கு அதிகம்...!

Wed May 10 , 2023
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலத்தில் மே 8, 2023 வரை ரூ.375.61 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இது கடந்த 2018 சட்டமன்ற தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட 4.5 மடங்கு கூடுதலாகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.147.46 கோடி ரொக்கம், ரூ.96.60 கோடி மதிப்புள்ள விலை மதிப்பிலான உலோகங்கள், ரூ.24.21 கோடி மதிப்பில் இலவசப் பொருட்கள், ரூ.83.66 […]
6f4e0229138bf6f84b96c5eab5d3ae3c1d5ff5e74579457db471873ddf259e05

You May Like