Breaking: கரூர் துயரம்.. சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி.. உயர்நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு..!

dc Cover 4ue75ephnt382p47rlain39m41 20160218071059.Medi

அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்..

விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. குறிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது “ பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர் மனு தாரர்.. அவருக்கு சிபிஐ விசாரணை கோர என்ன தகுதி உள்ளது.. நீதிமன்றத்தை அரசியல் மேடையாகக் வேண்டாம்.. போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்..


இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் உள்ளது.. இப்போதே விசாரணையை மாற்றும் படி எப்படி கேட்க முடியும்? உங்கள் அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்” என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.. மேலும் சிபிஐ விசாரணை கோரியை மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

Read More : Breaking : இனி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பரப்புரைக்கு அனுமதி வழங்கக் கூடாது – ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..

RUPA

Next Post

பாகிஸ்தானின் F-16 & J-17 போர் விமானங்கள் ஆபரேஷன் சிந்தூரில் அழிக்கப்பட்டன; பாகிஸ்தான் பிரதமருக்கு IAF தலைவர் பதிலடி.!

Fri Oct 3 , 2025
மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​ஆயுதப்படைகள் ஐந்து பாகிஸ்தான் ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா.வில் தனது கருத்துகளின் போது இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான திரித்து கூறப்பட்ட உண்மைகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தக் கூற்றை மீண்டும் கூறினார். இந்தியா ஐந்து பாகிஸ்தான் […]
iaf chief 1759476320 1

You May Like