5350 ஆண்டுகள் பழமையான தமிழர்கள்.. இதை மறந்துடாதீங்க.. மத்திய அமைச்சருக்கு தங்கம் தென்னரசு தரமான பதிலடி..

7777

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் பூர்வ ஆய்வு தேவை என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “ அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வந்த பிறகே கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க முடியும். அதற்கு இன்னும் அதிகமான அறிவியல் பூர்வ முடிவு தேவை.” என்று தெரிவித்தார்.


மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்தின் தொன்மையை மத்திய அரசு தொடர்ந்து ஏற்க மறுக்கிறது என்று வரலாற்று ஆய்வாளர்களும், அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கம் தென்னரசு இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?

மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. அவரின் எக்ஸ் பதிவில் “ இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை.

கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார்.

கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே.” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. ஜூன் 14-ம் தேதி நீலகிரிக்கு ரெட் அலர்ட்..

RUPA

Next Post

“தமிழ்நாட்டில் இனி அரசு மருத்துவமனைகளிலும் கட்டணம் வசூல்”..!! அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சியில் மக்கள்..!!

Tue Jun 10 , 2025
அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவு தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மருந்துகள், சிகிச்சைகள் என அனைத்தும் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்புவோருக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படும். இது பொதுவார்டுகளைத் […]
Subramaniyan 2025

You May Like