2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, குடும்ப தலைவிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக கூடுதலாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 ஏற்கனவே 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஜூன் மாதத்திலிருந்து நிரந்தரமாக ரூ.2,000 வழங்கப்படவுள்ளது.
உரிமைத் தொகை உயர்வு மட்டுமின்றி, இத்திட்டத்தை மேலும் பரவலாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது விடுபட்டுள்ள தகுதியுள்ள பெண்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்களை இத்திட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்கான வழிகாட்டுதல்கள் ஜூன் மாத அறிவிப்பில் இடம்பெறக்கூடும் என தெரிகிறது. இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



