பெண்களே..!! திருமண உதவித்தொகை உயர்வு..!! இனி உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..? விவரம் உள்ளே..!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், முதலமைச்சர் கன்யா திருமண உதவி திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.49,000 நிதி உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த உதவி தொகை ரூ.51,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே லட்லி பஹன்னா யோஜனா திட்டத்தின் மூலமாக ஜூன் 10ஆம் தேதி முதல் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், லட்லி லட்சுமி யோஜனா திட்டம் மூலமாக ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது ரூ.1.18 லட்சம் தொகையானது அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு குழந்தைக்கு 21 வயது முடிவடையும்போது, இந்த நிதி உதவி அவர்களுக்கு வழங்கப்படும். தனது அரசு பெண்களுக்கு காவலர் மற்றும் ஆசிரியர் பணி நியமனங்களில் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்தியப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

பெற்றோர்களே உஷார்..!! மீண்டும் சிறுவனின் உயிரை காவு வாங்கிய தெரு நாய்கள்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Sun May 21 , 2023
இந்தியாவின் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொது இடங்களில் நடந்து செல்பவர்கள் மற்றும் சிறுவர்களை கொடூரமாக தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த சிறுவன் சோட்டு (வயது 7) சாலையோரங்களில் சிறு பொருட்களை விற்கும் வேலை பார்த்து வருகிறான். இந்த சிறுவன் கடந்த 16ஆம் தேதி அன்று பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த […]
1658627872123

You May Like