தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவேத் தொடங்கும் என்றும் ஜூன் மாதத்தில் இயல்பை விடவும் குறைவான மழையே இருக்கும் எனவும் இந்த மழைக் காலத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய 55 சதவிகித வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எல் நினோ காரணமாக, வரும் பருவமழைக் காலத்தில் குறைவான மழை கிடைக்கும் அபாயமும் உள்ளது. ஜூன் மாதத்தில் பெய்யும் குறைவான மழை காரணமாக, காரீப் பயிர் சாகுபடி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒருசில பகுதிகளைத் தவிர்த்து ஜூன் மாதத்தில் குறைவான மழை பெய்யவே வாய்ப்புள்ளது. சில இடங்களில் மட்டுமே இயல்பான அளவைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி- இந்திய வீரர் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார்!

Sun May 28 , 2023
மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கை இந்திய வீரர் பிரணாய் வென்றார். முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார். 2 வது சுற்றை 23-13 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். 3-வது சுற்றில் 20-18 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிரணாய் […]
batminton prannoy

You May Like