உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும் சுக்கு பற்றி தெரிந்துகொள்வோமா?

இஞ்சியை நன்றாகக் காயவைத்த பின்னர், அதில் உள்ள நீர் வற்றிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. சுக்கு எளிதில் கெடாது. குழந்தைகளுக்கு வயிறு மந்தமாக இருந்தால் சிறிதளவு சுக்கை அரைத்து அவர்களுக்குக் கொடுக்கலாம். சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும். காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த…’ என சித்த மருத்துவப் பாடலே உண்டு. காலை பல் துலக்கியதும் இஞ்சியையும், மதியம் சுக்குத் தூளையும் உணவுக்கு முன் எடுத்துக்கொள்வதன் மூலம், நோய்கள் பலவற்றை நம்மை அணுகாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறது இந்தப் பாடல்.

sukku 2

இனி, சுக்கின் பலன்களைப் பார்ப்போம்… 

● உடலில் உள்ள பித்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளாவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் உண்டாகும். வயிற்று உப்புசம், தலைவலி ஏற்படும். சுக்கு, பித்தத்தை சமன்படுத்தும். 

● லேசான காய்ச்சல் தலைவலிக்கு சுக்குத்தூளை வெறும் தண்ணீரோடு கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். சில சமயங்களில் சுக்கு, குழந்தைகளின் தோலைப் புண்ணாக்கிவிடும். எனவே, எட்டு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த சுக்கு பற்றுப் போடக் கூடாது. 

● அஜீரக் கோளாறு உள்ளவர்கள் சுக்கு, கொத்தமல்லி விதை இரண்டையும் சம அளவு எடுத்து, கஷாயம் செய்து, அதனுடன் பனைவெல்லம் சேர்த்து, வாரம் இருமுறை மாலை வேளைகளில் சாப்பிடலாம். 

● பெண்கள் கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு, மிகச் சிறிய அளவு சுக்குத்தூளை எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும். 

● சிலருக்கும் பயணத்தின்போதும், மலைப் பயணத்தின்போதும் குமட்டல் ஏற்படும். அதற்கு சுக்குத்தூள் சிறந்த மருந்து. 

● சுக்குக் கஷாயத்தை நல்லெண்ணெயில் காய்ச்சி, சுக்குத்தைலம் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் வேறு சில மூலிகைகளோடு கலந்தும் சுக்குத்தைலம் கிடைக்கும். இதைத் தலையில் தேய்த்தால், சைனஸ் நோயால் வரும் தலைவலி சரியாகிவிடும். 

தினமும் காலை எழுந்து டீ, காபி, போன்றவற்றை தவிர்த்து இயற்கையான சுக்கை பயன்படுத்தி பல நன்மைகளை அடைந்து ஆரோக்கியமாக வாழ்வோம்… நமது நண்பர்களுக்கும் இந்த டிப்ஸை கொடுக்கலாம்…

KOKILA

Next Post

பெற்றோர்களே உஷார்..!! வாழைப்பழம் கொடுத்து 6 வயது சிறுமி பலாத்காரம்..!! பகீர் சம்பவம்..!!

Sun Dec 25 , 2022
வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு வாழைப்பழமும், சிப்சும் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இந்த கிராமத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மணிஷ் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை […]
17 வயது சிறுமியை பலமுறை அனுபவித்த வாலிபர்..!! 7 மாதம் கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சி..!!

You May Like