உயிரை பறிக்கும் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து..!! மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிரடி..!!

போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததை அடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவை என தெரிகிறது. அங்கு மட்டும் 70 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் (45) மற்றும் மத்தியப் பிரதேசம் (23) அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும், வரும் நாட்களில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CHELLA

Next Post

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி மாற்றம்..!! ரோஹித் கிடையாது..!! இனி சூர்யகுமார் யாதவ் தான்..!!

Wed Mar 29 , 2023
ஐபிஎல் தொடரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான 16-வது ஐபிஎல் போட்டி மார்ச் 31ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இப்போட்டிகள் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் போட்டி வரும் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர […]
Ipl Rohit Suryakumar

You May Like