தமிழ்நாட்டில் தள்ளுவண்டி கடைகள் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மக்கள் அதிகம் நாடும் உணவக வடிவமாக வளர்ந்து வருகின்றன. குறைந்த செலவில், சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்குவதால் இவை பொதுமக்களின் தினசரி தேவையை பூர்த்தி செய்கின்றன.
இட்லி, தோசை, பொறி வகைகள் முதல் வட இந்திய, சீன உணவுகள் வரை பல்வேறு வகைகள் தள்ளுவண்டிகளில் கிடைப்பதால், வேலைக்குச் செல்லும் மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு இவை விரைவான மற்றும் மலிவான உணவு வாய்ப்பை வழங்குகின்றன. சமீப ஆண்டுகளில், சுகாதாரம் மற்றும் உரிமம் வழங்குதல் போன்ற அம்சங்களில் அரசு கண்காணிப்பை அதிகரித்து வருவதால், தள்ளுவண்டி கடைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தள்ளுவண்டி கடைகளின் உணவு விற்பனை குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்வோருக்கு உரிமம் இலவசம் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.. மேலும் ஆன்லைன், இ-சேவை மையங்களில் விற்பனை உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இன்றி, தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது .. தள்ளுவண்டி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தள்ளுவண்டி விற்பனையாளர்கள் முறையான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் தள்ளுவண்டி கடைகளில் முறையான விதிகளின் படி உணவு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
Read More : “அரசியல் நாகரிகம் இல்ல.. ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்கவில்லை எனில்..” கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!



