மின்- ஆதார் இணைப்பு…! இதை கட்டாயம் செய்ய வேண்டும்…! தமிழக அரசு முக்கிய தகவல்…!

தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் TNEB கணக்கை இணைப்பதில் உதவுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது.

குட் நியூஸ்..!! மின் இணைப்பில் இனி ஆதார் ஜெராக்ஸ் தேவையில்லை..!! மின்சார வாரியம் புதிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை இணைப்பதற்கான முதல் அறிவிப்பை வெளியிட்டது பின்னர் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இன்று கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் அனைவரும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை பயன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம்.

கூட்டம் அதிகமாக இருந்தால் ஷாமியான பந்தல் அமைக்க வேண்டும் மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் கவுண்டர்கள் மற்றும் கணினிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடர்ந்து பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திருவள்ளூரில் வானில் தோன்றிய அதிசயம்..! பறக்கும் ரயில் போல தெரிந்த மர்ம ஒளி...

Sat Dec 31 , 2022
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்றிரவு வானில் பறக்கும் ரயில் போவது போன்ற தெரிந்த ஒளியை இளைஞர்கள் வீடியோ எடுத்தனர். சிலர் இதனை வானில் தோன்றும் ஒரு அறிய நிகழ்வு என்று கூறினர். மற்றவர்கள் இது யுஎஃப்ஒ என்று ஆச்சரியப்பட்டனர். சிலர் இதனை ஆத்மாக்களின் அணி வகுப்பு என்றும், இது வேற்று கிரக வாசிகளின் வாகனம் என்றும் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் வானில் தோன்றிய இந்த மர்ம […]
starlink 1

You May Like