அதிக காற்று மாசுபாடு நகரங்களின் பட்டியல்!… தமிழகத்தில் எத்தனை நகரங்களில் தெரியுமா?… மத்திய அரசின் முழு விவரம் இதோ!

தமிழகத்தில் 4 நகரங்கள் அதிகளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்தும் மாசடைவதை தடுக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெறிமுறைகளை வகுத்துள்ளதா என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் பூபேந்திர யாதவ், நாடு முழுவதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி தூத்துக்குடி சென்னை மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிக அளவில் உள்ளதாகவும் கூறினார். மேலும், 23 மாநிலங்களில் 131 நகரங்களில் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்வதாக கூறிய அமைச்சர், மாசு அதிகரித்து உள்ள நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

எட்டாம் வகுப்பு முதல் எம்பிபிஎஸ்! தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Tue Feb 14 , 2023
தமிழ்நாடு அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் தென்காசியில் வரவேற்கப்படுகின்றன. மெடிக்கல் ஆபிஸர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் மருத்துவ பணியாளர் பணியிடங்களுக்கு ஐந்து காலியிடங்களும் என மொத்தம் 15 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் சேர்வதற்கு உச்சபட்ச வயது வரம்பு 40 ஆகும். மேலும் மெடிக்கல் ஆபீசர் […]
IMG 20230211 WA0030

You May Like