தமிழகத்தில் 4 நகரங்கள் அதிகளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்தும் மாசடைவதை தடுக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெறிமுறைகளை வகுத்துள்ளதா என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் பூபேந்திர யாதவ், நாடு முழுவதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி தூத்துக்குடி சென்னை மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிக அளவில் உள்ளதாகவும் கூறினார். மேலும், 23 மாநிலங்களில் 131 நகரங்களில் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்வதாக கூறிய அமைச்சர், மாசு அதிகரித்து உள்ள நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.