இந்திய அளவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. சிவகாசியில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றிய அவர் பிறகு ஹீரோயினாகவும்் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலும்; அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி படம்தான் கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரீதேவி ஹீரோயினாகவும் கலக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து தமிழில் கலக்கிவந்த அவர் பாலிவுட்டுக்கும் சென்றார். அங்கும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்ட அவர் இந்திய அளவில் டாப் ஹீரோயினாக வளர்ந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்தார். இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். போனிக்கு இந்தத் திருமணம் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு குஷி, ஜான்வி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிய ஸ்ரீதேவி ஒருகட்டத்தில் முழுமையாக முழுக்கு போட்டார். சூழல் இப்படி இருக்க கடந்த 2018ஆம் ஆண்டு துபாய் சென்ற அவர் அங்கிருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பாத்ரூமில் உயிரிழந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதனை போனி கபூர் திட்டவட்டமாக மறுத்துவருகிறார்.
இந்நிலையில் மலையாள இயக்குநர் ஆலப்புழா அஷ்ரஃப் ஸ்ரீதேவி குறித்து கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், “ஸ்ரீதேவி சொத்து, நகை, கோடிகளில் கார் என ஆடம்பரமாகத்தான் வாழ்ந்தார். ஆனாலும் அவருக்குள் ஒரு இனம் புரியாத சோகம் ஒன்று தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது என்பது எனக்கு தெரியும். அவர் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை தீவிரமாக காதலித்தார்.
இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்தார்கள் என்றும் அப்போது தகவல்கள் பரவின. சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மிதுன் சக்கரவர்த்தியை திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆகத்தான் ஸ்ரீதேவி விரும்பினார். ஆனால் அந்த விருப்பம் கடைசிவரை நிறைவேறவே இல்லை. பிறகுதான் போனிகபூரை அவர் திருமணம் செய்துகொண்டார்.
மிதுன் சக்கரவர்த்தியுடன் வாழ முடியவில்லையே என்று ஸ்ரீதேவிக்கு கடைசிவரை ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் மிதுன் மீது வைத்திருந்த காதலை மறந்துவிட்டு போனிகபூருடன் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினார். சினிமாவிலிருந்து விலகி குடும்பம், குழந்தைகள் என அவரது வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் 2018ஆம் ஆண்டு துபாயில் தங்கியிருந்தபோது ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
Read more: ஒரு ஸ்டேடியம் அளவு பெரியது.. பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்.. பூமிக்கு ஆபத்தா?