கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக இருக்கிறது. கடைகளில் இணையதளம் மற்றும் தனி நபர்கள் மூலமாக லாட்டரி விற்பனை அதிகமாக நடைபெற்றது. பெரும்பாலும் தினசரி லாட்டரிகளை அதிகம் பிற்பகல் 3 மணிக்கு இதன் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன அதோடு பம்பர் என்ற பெயரில் பல கோடி ரூபாய் பரிசையும் முன்வைத்தும் ஏராளமான லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகிறது.
அதிக அளவில் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள் இந்த லாட்டரி வாங்கி வருகிறார்கள். கேரளாவில் இருந்து இந்த லாட்டரிகள் அதிகமாக ஊடுருவி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கூடலூர் கம்பம் உத்தமபாளையம் போன்ற பகுதிகளை சார்ந்தவர்கள் நாள்தோறும் குமிளிக்கு தொழில் மட்டுமே கூலி வேலைக்காக சென்று வருகின்றனர்.
அப்படி சொல்லும் போது அதிர்ஷ்டத்தின் ஆர்வம் காரணமாக, ஏராளமான லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார்கள். அதாவது தமிழக சிறு, குறு வியாபாரிகள் பலரும் குமிளியில் லாட்டரிகளை வாங்கி வந்து தமிழக பகுதியில் மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கூடலூர் கன்னிகாலிபுரத்தை சேர்ந்த பொன்னப்பன்(70) என்பவர் கூடலூர் காய்கறி மார்க்கெட் அருகே லாட்டரி விற்பனை செய்தார் கூடலூர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர் அதன் பிறகு அனுமந்தன்பட்டி பாரதிராஜா (28) என்பவர் கம்பத்தில் உள்ள கம்பம் மெட்டுசாலையில் லாட்டரி விற்பனை செய்தார்.
அவரை கம்பம் வடக்கு காவல்துறை துணை ஆய்வாளர் முனியம்மாள் கைது செய்தார். அதோடு அவரிடமிருந்து ரூபாய் 64 ஆயிரத்து 680 ரூபாய் மதிப்பிலான லாட்டரி செய்யப்பட்டனர். அப்படி கைது நடவடிக்கை தொடர்ந்தாலும் லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் லட்சாதிபதி ஆசையில் ஏராளமான தொழிலாளிகள் தங்களுடைய பணத்தை இழந்து வருகிறார்கள்