மதுரை To மலேசியா..!! பெற்றோர்களை நம்ப வைத்து இளம்பெண் செய்த காரியம்..!! திடீரென வந்த ஃபோன் கால்..!! ஆடிப்போன குடும்பம்..!!

marriage register

மதுரையில் ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர் தர்மராஜ் என்பவரது 5-வது மகள் திவ்யா, எம்.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்தவர். மலேசியாவில் உயர்கல்வித் தொடரப் போவதாக தனது குடும்பத்தினரிடம் கூறி, அதற்கான அனைத்து ஆவணங்களையும் காட்டியதால், குடும்பத்தினருக்கோ அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ எந்த சந்தேகமும் வரவில்லை. படிப்புக்காக தேவையான 5 லட்சம் ரூபாய் உள்ளிட்ட செலவுகளையும் பெற்ற திவ்யா, கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் இருப்பதாகவே அவரது குடும்பத்தினர் உறுதியாக நம்பியிருந்தனர்.


இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் என்ற இளைஞர், திவ்யாவுடன் இணைந்து தொலைபேசியில் பேசியபோது, ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினார். அதாவது, திவ்யாவும் அவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தியைக் கேட்டு திவ்யாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பிரகாஷ் ஓர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த ரகசிய திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்த வாழ்க்கை சிக்கல்கள் காரணமாக, திவ்யா பெற்றோரிடம் உண்மையை சொல்ல முடியாமல் கடும் மன அழுத்தத்தில் தவித்துள்ளார். இந்த மன அழுத்தத்தின் காரணமாக, திவ்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பிரகாஷ் தெரிவித்தார். ஆனால், அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் நிலைகுலைந்த குடும்பத்தினர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பிரகாஷை கைது செய்தனர். மலேசியா கல்வி என்ற பெயரில் திவ்யா அரங்கேற்றிய 3 வருட ஏமாற்று நாடகம், ரகசிய திருமணம் மற்றும் அதன் துயரமான முடிவு என ஒரு குடும்பத்தில் மறக்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை..!! காதலன் மீது பழி போட சிறுமி..!! கடைசியில் நடந்த திடீர் திருப்பம்..!!

CHELLA

Next Post

கொழுந்தனுடன் கள்ளக்காதல்..!! இடையூறு செய்த கணவனை கொடூரமாக கொன்று ஆற்றில் வீசிய மனைவி..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Sun Nov 16 , 2025
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சந்தானம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வர் என்பவரது மனைவி மனிஷா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்காததால், மனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், கடந்த முன்தினம் அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து ஒரு ஆணின் […]
Sex 2025 1

You May Like