மனநிலை சம்மந்தப்பட்ட சிகிச்சைக்கு மேஜிக் காளான்!… 3 வருட ஆலோசனைக்கு பின் ஒப்புதல் அளித்தது ஆஸி.!

உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா, மனநிலை சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க சைகடெலிக்ஸ்-ஐ சட்டபூர்வமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.


ஆஸ்திரேலியாவின் போதைப்பொருள் கண்காணிப்பு அமைப்பான தெரப்யூடிக் குட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (TGA) கிட்டத்தட்ட மூன்று வருட ஆலோசனைக்குப் பிறகு இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஜூலை 1 முதல், ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்கள் PTSD எனும் மனநிலை சிகிச்சைக்கு எக்ஸ்டசி என அழைக்கப்படும் MDMA மற்றும் மேஜிக் காளான்களை பரிந்துரைக்க இது வழிவகை செய்கிறது. MDMA மற்றும் மேஜிக் காளான்கள் இரண்டு மருந்துகளும் ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்என்பது குறிப்பிடத்தக்கது. மனச்சோர்வு மற்றும் மன உளைச்சலுக்குப் பிறகான மன அழுத்தக் கோளாறு (PTSD) சிகிச்சைக்காக, MDMA மற்றும் மேஜிக் காளான்களை பரிந்துரைக்க மருத்துவர்களை அனுமதித்த உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

திருப்பதியில் இனி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகமாக்கப்படும்!... தேவஸ்தானம் அதிரடி!

Mon Jul 3 , 2023
திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப் பரிவர்த்தனைக்கு பதில், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப்பரிவர்த்தனைகளுக்கு பதில், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தான முடிவு செய்துள்ளது. அதன்படி கோவில்களில் […]
thirupathitemple

You May Like