இரவு தூங்கும் முன் இந்த விஷயங்களை கண்டிப்பா பண்ணுங்க..!! உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது..!!

பொதுவாக ஒருவரின் வாழ்வில் அன்றாடம் கடைபிடிக்க கூடிய பழக்க வழக்கங்கள் தான் அவரை ஆரோக்கியமானவராக வைத்து கொள்ளும். அந்த வகையில், தினசரி செயல்பாடுகள், நடைமுறைகள், நேர அட்டவணைகள் ஒருவருக்கு மிகவும் முக்கியமானவை. யாராக இருந்தாலும், ஒரு கால அட்டவணையை கொண்டு தினசரி தனது பழக்க வழக்கங்களை சீராக செய்து வருவது எண்ணற்ற நன்மைகளை தரும். ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் நமது தினசரி நடவடிக்கைகள் என்பது சீரற்ற முறையில் உள்ளன. இரவு நேரத்தில் நாம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் நமது அடுத்த நாளை சிறப்பாக கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும். அந்தவகையில், இரவு நேரத்தில் அவசியம் பின்பற்ற வேண்டிய 4 பழக்க வழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.


எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் :

பொதுவாக கணினி, தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் டிவைஸ்கள் அனைத்தும் வலுவான நீல ஒளியை வெளியிடுகின்றன. இந்த டிவைஸ்களை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தும் போது, அந்த நீல ஒளி உங்கள் மூளையை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லாமல் தடுக்க கூடும். மேலும், இது இரவு நேரத்தை கூட உங்கள் மூளையை பகல்நேரம் என்று நினைக்க வைக்கிறது. இதன் விளைவாக, உங்கள் மூளை மெலடோனின் உற்பத்தியை தடுக்கிறது மற்றும் இரவு நேர தூக்கத்தை வரவிடாமல் உங்களை கண் விழிக்க வைக்கிறது.

ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள்:

காலை நேரத்தில் முதலில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் ஹார்மோன் சமநிலையை சமாளிக்க மிகவும் உதவுகிறது. மேலும், இது உங்களின் எடையை குறைக்கவும், சர்க்கரை அளவை சீராக வைக்கவும் வழிவகுக்கிறது. இந்த பழக்க வழக்கத்தை கொண்டு வர இரவு நேரத்தில் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இவற்றில் கார்போஹைட்ரேட் இல்லாததால், ரத்த குளுக்கோஸ் அளவும் அதிகரிக்காமல் இருக்கும். கூடுதலாக இது இன்சுலின் ரெசிஸ்டென்ஸையும் மேம்படுத்துகிறது.

பட்டியலை எழுதுங்கள் :

எப்போதும் அடுத்த நாளை தொடங்கும் முன்னர், முதல் நாள் இரவே செய்ய வேண்டிய பட்டியலை உருவாக்குவது நாளைய பணிகளை பற்றி நினைத்து நம் மனம் கவலைப்படுவதைத் தடுக்கிறது. நீங்கள் காலையில் எழுந்ததும் அடுத்த நாளைத் தொடங்க ஒரு பயணத் திட்டம் தயாராக இருந்தால், அனைத்தும் சரியாக நடக்கும். ஒவ்வொரு மாலையும் 15 – 30 நிமிடங்கள் ஒதுக்கி, அடுத்த நாளுக்காக தயாராகுங்கள். இவ்வாறு செய்து வந்தால், காலை நேரத்தில் பரபரப்பாக இல்லாமல், நிதானமாக வேலைகளை செய்து முடிக்கலாம். இது நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது மன அமைதியை மேம்படுத்தவும் உதவும்.

மன அழுத்தத்தைத் தணிக்கவும் :

உங்களது மனதை சோர்வில் இருந்து காக்க உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்து வரவும். அது தியானம், மூச்சு பயிற்சிகள், புத்தகம் படிப்பது, லைட் மியூசிக் கேட்பது அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசுவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவை மனதையும் உடலையும், நிம்மதியாக வைப்பதுடன் பதற்றத்தை நீக்கி, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன. மேலும், அடுத்த நாள் காலையில் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் எழுந்து உங்களது வேலைகளை திறம்பட செய்ய உதவும்.

CHELLA

Next Post

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி…..! காவல் துறையினர் நடத்திய அதிரடி துப்பாக்கிச்சூடு என்ன நடந்தது…..!

Fri May 26 , 2023
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் அதிகாலையில் சாம்பார் மணி உள்ளிட்ட 2 பேர் மதுபானங்களை திருடிக் கொண்டிருந்தனர் இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல்களை கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாம்பார் மற்றும் மணியை பிடிக்க முயற்சி செய்தபோது கத்தியால் காவலர்களை தாக்கி விட்டு தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து […]
gun shot

You May Like