விமான நிலையங்களில் கட்டாயமாகும் கொரோனா பரிசோதனை..!! அடுத்தடுத்த நடவடிக்கைகளால் மக்கள் பீதி..!!

இன்று முதல் விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.


கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

விமான நிலையங்களில் கட்டாயமாகும் கொரோனா பரிசோதனை..!! அடுத்தடுத்த நடவடிக்கைகளால் மக்கள் பீதி..!!

சீனாவில் வேகமாகப் பரவும் BF.7 வகை கொரோனா தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு விமான பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் சீனா, ஹாங்காங்கில் இருந்து வருவோருக்கு இன்று முதல் விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

வாடிக்கையாளர்களே..!! ஜனவரியில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!

Thu Dec 22 , 2022
அடுத்தாண்டு (2023) ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. அதன்படி, வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது தவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் மூடப்படுவது வழக்கம். மொத்தம் 14 நாட்கள்… ஜனவரி 1, 2023 (ஞாயிறு) […]
Bank Holidays Banks will be closed for 16 days in December Check out full list of vacations here 1

You May Like