தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. மேலும் சென்னைக்கு தென்கிழக்கே 640 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
மாமல்லபுரம் மற்றும் பழவேற்காடு பகுதியின் இடையே 10ம் தேதி காலை நேரத்தில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரனாக தமிழத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. மேலும் தமிழகம் மாற்று புதுச்சசேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியாக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவாரூரில்பள்ளிகளுக்கு, தஞ்சவூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.