மெரினா கடற்கரை..!! பொதுமக்களுக்கு அனுமதியில்லை..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை காமராஜர் சிலை உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா நடைபெறும் காமராஜர் சாலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் நாளை முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

’வேங்கைவயல் விவகாரம்’..!! ’நான் முதல்வராக இருந்திருந்தால்’..!! கொந்தளித்த சீமான்..!!

Wed Jan 25 , 2023
”சமூக நீதி என்ற வார்த்தை செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக அறிய, சீமான் இன்று நேரில் சென்றார். அங்கு மக்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”வேங்கைவயல் […]
’வேங்கைவயல் விவகாரம்’..!! ’நான் முதல்வராக இருந்திருந்தால்’..!! கொந்தளித்த சீமான்..!!

You May Like