கோவையில் இறைச்சி விற்பனைக்கு தடை; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாநகராட்சி அறிவிப்பு..!!

கோவையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது.


மேலும், கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் இரண்டாம் தேதி எந்த விதமான இறைச்சியையும் விற்பனை செய்ய கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

காந்தி ஜெயந்தி அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்ய கூடாது. மேலும் கடைகளை திறந்து வைக்க கூடாது. தடையை மீறிச் செயல்படுபவா்களின் கடைகளில் இருக்கும் இறைச்சி பறிமுதல் செய்யப்படும், மேலும் சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

’ஓபிஎஸ் உடன் பேசி பல வருஷம் ஆச்சு’..!! ’அப்போ அது என்னாச்சு’..? டிடிவி தினகரன் திடீர் பல்டி..?

Fri Sep 30 , 2022
ஓபிஎஸ் உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்ய அணிலைப் போல் செயல்படுவோம். காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் தான் உள்ளன. யாருடன் கூட்டணி என்பது அப்போது முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. […]
TTV Ops

You May Like