பட்டுக்கோட்டை அருகே சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக வெறும் ரூ.10 மட்டுமே கட்டணமாக வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்து வந்த பிரபல மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையின் அதிசய மருத்துவர் என மக்களால் போற்றப்படுபவர் தான் ரத்தினம்பிள்ளை.
இவர், பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதில், அதிசயம் என்னவென்றால், இவரை சந்திக்க வரும் நோயாளிகளிடம் வெறும் ரூ.10 மட்டுமே கட்டணமாக வாங்கிக் கொள்வாராம். அனைத்து தரப்பு மக்களுக்குமே இவ்வளவு தான் கட்டணமாம். இதனால், மருத்துவர் ரத்தினம்பிள்ளையிடம் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வர்.
இந்நிலையில் தான், வயது மூப்பு காரணமாக பிரபல மருத்துவர் ரத்தினம்பிள்ளை இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 96. தமிழ்நாட்டில் அதிக பிரசவம் பார்த்த ஆண் டாக்டர் என்ற பெருமையையும் இவர் பெற்றவர். மருத்துவ பணி தொடங்கும்போது வாங்கிய பீஸ் 2 ரூபாய் மட்டுமே. 1997ஆம் ஆண்டுக்கு பிறகு 5 ரூபாய். 2007ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் இறக்கும் வரை வெறும் 10 ரூபாய் மட்டுமே வாங்கினார். இந்நிலையில், இவரது மறைவுக்கு பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More : இனி கவலையே வேண்டாம்..!! அவசரத்திற்கு உதவும் ஆதார்..!! ரூ.10,000 வேண்டுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!