இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான (EV) மினுமினுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே தற்போது விலைப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. டெஸ்லா மற்றும் வின்ஃபாஸ்ட் போன்ற சர்வதேச ஜாம்பவான்கள் இந்திய சந்தையில் கால்பதித்துள்ள நிலையில், தனது சந்தைத் தரத்தைத் தக்கவைத்துக்கொள்ள உள்நாட்டு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதிரடியான விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.3.8 லட்சம் வரை சேமிக்க முடியும்.
மாடல் வாரியாக அதிரடி சலுகைகள் :
டாடா நிறுவனத்தின் அதிநவீன மாடலான கர்வ் (Curvv EV) தான் இந்த விற்பனை வேட்டையில் முதலிடத்தில் உள்ளது. இம்மாடலுக்கு அதிகபட்சமாக ₹3.8 லட்சம் வரை மெகா தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025-ல் தயாரிக்கப்பட்ட சேஸிஸ் (Chassis) மாடல்களுக்கு ₹3.3 லட்சமும், 2026-ல் தயாரிக்கப்பட்ட புதிய மாடல்களுக்கு ₹2.8 லட்சம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கடுத்தபடியாக, இளைஞர்களின் விருப்பமான பன்ச் (Punch EV) கார்களுக்கு 2024-25 மாடல்களுக்கு ₹1.6 லட்சமும், 2026 மாடல்களுக்கு ₹90,000 வரையிலும் சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
நடுத்தர மற்றும் பிரீமியம் ரக கார்கள் :
டாடாவின் மலிவு விலை மின்சார காரான டியாகோ (Tiago EV) தற்போது இன்னும் பட்ஜெட்டுக்குள் வந்துள்ளது. பழைய ஸ்டாக்குகளுக்கு (2024-25) ₹1.5 லட்சமும், 2026 மாடல்களுக்கு ₹60,000-மும் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டாடாவின் மிகச்சிறந்த விற்பனை மாடலான நெக்ஸான் (Nexon EV) கார்களுக்கு அதிகபட்சமாக ₹1.2 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 2026-ல் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு ₹30,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் ரகமான ஹேரியர் (Harrier EV) காரை பொறுத்தவரை, 2025 மற்றும் 2026 மாடல்கள் அனைத்துக்கும் தலா ₹1.5 லட்சம் தள்ளுபடியுடன், பழைய வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் ‘லாயல்டி போனஸ்’ (Loyalty Bonus) சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மின்சாரக் கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, இந்த பிப்ரவரி மாத தள்ளுபடி ஒரு பொன்னான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
Read More : மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! நாளை தமிழ்நாடு முழுவதும் இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!!



