சோசியல் மீடியாவில் பிரைவசி பற்றிய கவலைகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் மெட்டா (Meta) மற்றும் யாண்டெக்ஸ் நிறுவனங்கள், பயனர்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை அனுமதியின்றி சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுவாக, ஆண்டிராய்டில் பாதுகாப்பு அமைப்பு காரணமாக, ஒரே மொபைலில் உள்ள மற்ற செயலிகளில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் அந்த பாதுகாப்பையும் மீறி, பயனர்களின் முக்கியமான விவரங்களை சேகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், பயனர்கள் எந்த வலைத்தளங்களை பார்க்கிறார்கள் என்பதை நமக்கு தெரியாமல் அறிந்துகொண்டு சேமித்துள்ளன. குறிப்பாக, சில வலைத்தளங்களில் பயன்ர்கள் செல்வதைப் பார்த்து உங்கள் இணைய பயன்பாட்டை கண்காணித்துள்ளன. இது பிரவுசர்களில் கூடுதல் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் Incognito Mode-ஐயும் மீறி செயல்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது வெளிவந்துள்ள நிலையில், கூகுள் மற்றும் ஃபயர்பாக்ஸ் நிறுவனங்கள் இது தங்களது விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளன. மேலும், இதுதொடர்பான விசாரணைகளையும் அவர்கள் தொடங்கியுள்ளன. அதேபோல், கூகுள் பிளே ஸ்டோரின் செயல்பாடுகள் பயனர்களின் பிரைவசிக்கும் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த குறைபாடு மூலமாக, மெட்டா நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட பிரவுசிங் ஹிஸ்டரி டேட்டாக்களை சேகரித்து வந்த நிலையில், கடந்த 2024இல் முதன்முறையாக இது வெளிச்சத்திற்கு வந்தது. இதுபோன்ற பயனர்களின் தகவல்களை திரடுவதைத் தடுக்க, மொபைல் பிளாட்ஃபாரங்களிலும், பிரவுசர்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது.