மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆபிஸ், ஆப்ஸ் பயனர்களுக்கு ‘அதிக ஆபத்து’ !… எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபீஸ் மற்றும் ஆப்ஸ் ஆகியவற்றின் பழைய வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகலும் மிகவும் நம்பகமானது மற்றும் பாதுகாப்பானது என்றும் பயனர்கள் எந்தவித சைபர் தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக தங்களது டாக்குமென்ட்களை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகளை அவ்வபோது வெளியிட்டுவருகிறது.அந்த புதுப்பிப்புகளை பின்பற்றுபவர்களுக்கு எந்த விதமான சைபர் தாக்குதலும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில பயனர்கள் பழைய வெர்ஷன் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது என்பதற்காக பழைய பதிப்புகளை தற்போது பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் பழைய வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது. மேலும், மைக்ரோசாப்ட் தயாரிப்புகளின் பழைய வர்ஷனை பயன்படுத்துவதால் சைபர் தாக்குதல் அதிகம் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் எனவே லேட்டஸ்ட் வெர்சனை மட்டும் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

KOKILA

Next Post

மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்குமாம்!... இந்த பழக்கங்களை மாற்றுங்கள்!... ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!...

Sat Mar 18 , 2023
அன்றாட வாழ்வில் சில செயல்பாடுகள் நமது மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கையும் அறிவுறுத்தியுள்ளனர். தினந்தோறும் நடவடிக்கைகள் பழக்க வழக்கங்கள் என மனிதர்களின் ஒவ்வொருரிடையே பல மாறுபாடுகள் இருக்கும். அந்தவகையில் சிலர் அவரவர் பழக்க வழக்கங்களை ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வர். சிலர் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிவர். இந்தநிலையில், அன்றாட செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்று பார்க்கலாம். அதன்படி, காலை உணவு என்பது உடலில் ஏற்படும் […]
brain

You May Like