ஜார்ஜியா-அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடுவானில் சென்றுக்கொண்டிருந்த துருக்கி விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் (TUAF543) விமானம் திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
அஜர்பைஜான் எல்லையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் உள்ள ஜார்ஜியாவின் ககேட்டி பகுதியில் C-130 போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . ஜார்ஜிய சிக்னாகி நகராட்சிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
துருக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி யூரோநியூஸ் செய்தியின்படி, விமானத்தில் விமானக் குழுவினர் உட்பட 20 ராணுவ வீரர்கள் இருந்தனர், அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். “அஜர்பைஜானில் இருந்து எங்கள் நாட்டிற்குச் செல்லும் வழியில் எங்கள் சி -130 இராணுவ விமானம் ஜார்ஜியா-அஜர்பைஜான் எல்லையில் விபத்துக்குள்ளானதை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிந்து கொண்டோம்” என்று ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார். “கடவுள் எங்கள் தியாகிகளுக்கு கருணை காட்டட்டும்.”
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் துருக்கிக்கு இரங்கல் தெரிவித்து, “படைவீரர்களின் இழப்பு குறித்த துயரச் செய்தியால் மிகவும் வருத்தமடைந்தேன்” என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் “துர்க்கியேயின் சகோதர மக்களுக்கும்” தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விபத்து விசாரணைக் குழு சம்பவ இடத்திற்குச் சென்று வருவதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Readmore: இந்த கோவிலுக்கு சென்று வந்தால் வாழ்க்கையே மாறும்.. விராலிமலை முருகன் அருளால் நிகழ்ந்த அற்புதங்கள்..!



