தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக, 24-05-2023 முதல் 26-05-2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 27-05-2023 மற்றும் 28-05-2023ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

இப்படி ஒரு வழக்கா..? குளித்துவிட்டு வீட்டுக்குள் துண்டைக் கட்டிக்கொண்டு நிற்பது குற்றமா..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Wed May 24 , 2023
மும்பை டோங்கிரி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் தனது வீட்டில் குளித்துவிட்டு இடுப்பில் துண்டுக் கட்டிக் கொண்டிருந்ததைக் காரணம்காட்டி, போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. 50 வயது நபர் தனது வீட்டுக் கதவை திறந்து வைத்திருந்தார். அந்நேரம் பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி வீட்டுக்குள் வந்துள்ளார். 50 வயது நபர் வீட்டில் குளிக்க தயாராகிக் கொண்டிருந்தார். பாத்ரூமுக்குச் சென்று குளித்துவிட்டு, துண்டைக் கட்டிக்கொண்டு பாத்ரூமைவிட்டு வெளியில் வந்துள்ளார். […]
இப்படி ஒரு வழக்கா..? குளித்துவிட்டு வீட்டுக்குள் துண்டைக் கட்டிக்கொண்டு நிற்பது குற்றமா..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like