“அம்மா.. திரும்ப திரும்ப அப்படி சொல்லாத”..!! பெற்ற தாயை கத்தியால் குத்திய 14 வயது மகன்..!! கதிகலங்கிய கடலூர்

Cuddalore 2025

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிவிட்டதாக தகவல் ஒன்று பரவியது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், காவல்துறையினருக்கே அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது.


கத்தியால் குத்தப்பட்ட அந்தப் பெண்ணின் 14 வயது மகனே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 9ஆம் வகுப்பு படித்து வரும் அந்தச் சிறுவன், நன்றாகப் படிக்க வேண்டும் என்று அவனது தாய் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார்.

ஏற்கனவே அந்தச் சிறுவன் நன்றாகத்தான் படித்து வந்த நிலையில், தாயின் தொடர்ச்சியான அறிவுரைகள் அவனுக்கு எரிச்சலூட்டியுள்ளன. ஒரு கட்டத்தில் தாயின் வற்புறுத்தலை தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது தாயையே கத்தியால் குத்தியுள்ளார்.

நன்றாகப் படித்து வந்த ஒரு மாணவன், தாயின் கண்டிப்புக்காக இப்படியான கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : இந்த கோயிலில் விளக்கு ஏற்றி இதை செய்தால் உங்கள் வேண்டுதல் அப்படியே நிறைவேறும்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

CHELLA

Next Post

சத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 1,500 சிறப்பு ரயில்கள்..! இந்திய ரயில்வே அறிவிப்பு...!

Thu Oct 23 , 2025
சத் பண்டிகையை முன்னிட்டு அடுத்த 5 நாட்களில் 1,500 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் பண்டிகைக் காலத்தில் மக்களை இணைப்பதில், இந்திய ரயில்வே தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. சத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பயணம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு பயணியும் தங்கள் இலக்கை பாதுகாப்பாகவும் வசதியாகவும் அடைவதை உறுதி செய்ய ரயில்வே கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறது. வழக்கமான ரயில் சேவைகளைவிட கூடுதலாக, […]
train

You May Like