மாத வருமானம் மட்டும் ரூ.3 லட்சமாம்.. இந்த ஆட்டோ ஓட்டுநரின் சொத்து மதிப்பை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

bengaluru auto driver 1

சமூக ஊடக தளமான எக்ஸில் ஒரு பயனர் பகிர்ந்த கதை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வைரலாகியுள்ளது. பயனர் பெங்களூருவில் ஒரு ஆட்டோவில் பயணம் செய்த போது, ஆட்டோ ஓட்டுநர் அணிந்து கொண்டிருந்த ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் ஹெட்ஃபோன்கள் அவருக்கு மிகவும் விசித்திரமாக தோன்றியது.


அவர் ஆட்டோ ஓட்டுநருடன் உரையாடி, அவரது வருமானம் மற்றும் சொத்துக்களைப் பற்றி கேட்டறிந்தார். ஆட்டோ ஓட்டுநர் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதை அறிந்து ஆச்சரியமடைந்தார். இது ஒரு மூத்த மென்பொருள் பொறியாளரின் சம்பளத்தோடு ஒப்பிடும் அளவுக்கு சமமாகும்.

மேலும், ஆட்டோ ஓட்டுநருக்கு பெங்களூருவில் நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள் உள்ளதாகவும், தனது வருமானத்தில் ஒரு பகுதியை AI ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்துள்ளதும் அவர் கூறினார். இதன் மூலம், பெரும்பான்மையான பெங்களூரு நகரில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களும் பெரிய வருமானம் ஈட்டுகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.

மேலும் அந்த பயனர் இந்தக் கதையை யாரும் தனக்குச் சொல்லவில்லை என்றும், ஆட்டோ ஓட்டுநரிடம் பேசி அதை உறுதிப்படுத்திய பிறகு அதை X இல் பதிவிட்டதாகவும் கூறினார். அவரது பதிவு இணையத்தில் வைரலான நிலையில் பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் நாமும் வேலையை விட்டுவிட்டு இனி ஆட்டோ ஓட்டலாம் என நகைச்சுவை கருத்தை பதிவிட்டார்.

மற்றொரு பயனர், முந்தைய காலத்தில் நகரின் புறநகர்ப் பகுதிகளில் நிலம் வாங்கிய ஓட்டுநர்கள் இப்போது கோடீஸ்வரர்களாகிவிட்டதாக தெரிவித்தார். சில நெட்டிசன்கள் பெங்களூரில் எதுவும் சாத்தியம், ஆட்டோ பயணம் கூட மிகவும் விலை உயர்ந்தது என்று எழுதினர். மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது பெங்களூரில் எல்லாமே விலை அதிகம் என்பது உண்மைதான். அங்கு வாழ்க்கைச் செலவும் மிக அதிகம்.

Read more: இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை.. கை நிறைய சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! செம அறிவிப்பு..

English Summary

Monthly income of only Rs. 3 lakhs.. 2 houses worth several crores.. You will be shocked to hear the value of this auto driver’s assets..!!

Next Post

“அதிமுகவை உள் வாடகைக்கு விட்டுள்ளார் இபிஎஸ்.. பாஜக எத்தனை அடிமைகளுடன் வந்தாலும் ஒன்னும் நடக்காது..” உதயநிதி விமர்சனம்!

Fri Oct 10 , 2025
எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உள் வாடகைக்கு விட்டுள்ளார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராடும் அனைவரும் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் படத்தை வைத்து முழக்கமிடுவதை பார்க்க முடிகிறது.. தந்தை பெரியார் அரசியல் ரீதியாக தமிழ்நாட்டை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்.. அதனால் தான் பாஜகவின் எந்த தில்லுமுல்லு வேலையும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை.. பாஜகவால் நேரடியாக மக்கள் ஆதரவை […]
edapadi k palanisamy udhayanidhi stalin

You May Like