சூப்பர் வாய்ப்பு…! 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்…! 31-ம் வேலைவாய்ப்பு முகாம்…!

Job Camp 2025

சேலம் மாவட்டத்தில் வருகின்ற 31.05.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட திட்டக்குழு (FBDP) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31.05.2025 அன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் ஜவுளி வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.


மேலும், இம்முகாமில் 5000 க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர். தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ள வேண்டும். எனவே, பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில்நிறுவனங்களும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: குட் நியூஸ்..! போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல்…!

Vignesh

Next Post

Gold Rate: இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..? - இன்றைய நிலவரம் இதோ!

Fri May 30 , 2025
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மே 30 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. தங்கம் என்றாலே, மக்கள் மத்தியில் ஒருவித மவுசு இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனென்றால், முதலீடு செய்வதற்கும், எதிர்கால தேவைக்காகச் சேமிப்பதற்கும், பரிசு கொடுப்பதற்கு என பல்வேறு காரியங்களுக்கு தங்கம் முக்கிய காரணியாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்திய மக்களின் சேமிப்பில் முதலிடம் வகுப்பது தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் தான். […]
Gold Rate today 1

You May Like