ஒரே குழந்தைக்கு தாயும்!… பாட்டியும்!… எங்கே?… எப்படி தெரியுமா?… நடிகையின் நெகிழ்ச்சி பதிவு!

ஸ்பானிய தொலைக்காட்சி நடிகை ஒருவர், தனது இறந்த மகனின் விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்ட வாடகைத் தாய் மூலம் பிறந்த சில வாரங்களே ஆன குழந்தையை சமீபத்தில் தத்தெடுத்துள்ளார்.


68 வயதான ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையான அனா ஒப்ரெகன், அனா சாண்ட்ரா என்ற ஒரு வார வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார். இது புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணிற்கு பிறந்த குழந்தை. வாடகைத் தாயான இவருக்கு, ஸ்பானிஷ நடிகையின் இறந்து போன மகனின் விந்தணு மூலம் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தத்தெடுப்பு பற்றிய வினோதமான விஷயம் என்னவென்றால், நடிகையின் இறந்த மகன் மூலம் குழந்தை பிறந்தது என்பது தான்., இது ஸ்பெயினில் வாடகைத் தாய் மற்றும் குழந்தைகளின் தனியுரிமைக்கான உயிரியல் நெறிமுறைகள் பற்றி ஒரு பெரிய விவாதத்தை எழுப்பியது. இதற்கிடையில், ஒப்ரெகன் தனது சொந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்து, பேத்தியை மகளாக்கிக் கொண்டார்.

இந்தப் பெண் குழந்தை என் மகள் அல்ல, என் பேத்தி” என்று தொலைக்காட்சி நடிகை அனா ஒப்ரெகன் பிரபல பத்திரிகைக்கு கொடுத்த ஒரு நேர்காணலின் போது, அதன் அட்டை படத்துக்காக குழந்தையுடன் போஸ் கொடுத்தார். ” இறந்து போன என் மகனின் கடைசி ஆசையை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்?” குழந்தையை இழந்த பெற்றோருக்கு மட்டுமே இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். ஒப்ரெகானுக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே இருந்தது – அது அவரது இறந்த மகன் அலெஸ் லெகியோ. ஆலெஸ் தனது 27 வயதில் புற்று நோயால் 2020 இல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாடகைத் தாய் சட்டவிரோதமாக கருதப்படாததால், புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் வாடகைத் தாய்க்கு, இறந்து போன மகனின் விந்தணு மூலம் குழந்தை கருத்தரிக்கப்பட்டது. இறந்த மகணின் விந்தணு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சாத்தியமானது.

ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையின் மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்தெடுப்பது ஸ்பெயினில் ஒரு விவாதத்தைத் தூண்டியது. அங்கு அனைத்து வகையான வாடகைத் தாய் முறையும் – பணம் எதுவும் கை மாறாத “பரோபகார” நடவடிக்கை என்று அழைக்கப்படுவது உட்பட – அனைத்து விதமான முறையும் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

பலாத்காரத்தால் பெண் கர்ப்பமடைவதைவிட கொடுமையானது வேறு எதுவும் இல்லை: கேரள நீதிமன்றம்!

Sat Apr 8 , 2023
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பதை விட கொடுமையான சூழல் வேறு எதுவும் இருக்க முடியாது கேரள நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 2021 ஆண்டில் 17வயது சிறுமியை, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மேலும், நிர்வாணப் படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப் போவதாக மிரட்டி 26 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது. […]
rape attampt

You May Like