தாய் நிர்வாணம் பிள்ளையின் கை வண்ணம்..இது சரியா????

பாத்திமா என்ற சமூக ஆர்வலர், தனது இரண்டு மைனர் குழந்தைகள் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய அனுமதித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தார் ரெஹானா பாத்திமா. அது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரெஹானாவின் செயலை குற்றமென தீர்ப்பளித்தது போக்சோ நீதிமன்றம்.


அதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில், ரெஹானா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் நிர்வாணம் அருவருப்பல்ல / ஆபாசமல்ல என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

நிர்வாணத்தை ஆபாசமான அல்லது அநாகரீகமான அல்லது ஒழுக்கக்கேடானதாக வகைப்படுத்துவது தவறு. ஆண் உடல் சார்ந்த விஷயங்கள், மிக அரிதாகவே கேள்விக்கு உள்ளாக்கப்படும். அதே வேளையில், பெண்களின் விஷயங்கள் மட்டும் இந்த ஆணாதிக்கக் கட்டமைப்பில் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. பெண்ணின் நிர்வாணம் தடைசெய்யப்பட்டதாகவே சமூகத்தில் கருதப்படுகிறது, ஏனெனில் நிர்வாணமான பெண்ணின் உடலென்பது சிற்றின்ப நோக்கங்களுக்காக மட்டுமே பார்க்கப்படுகிறது. உண்மையில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு நபரின் நிர்வாண உடலின் மேல் ஓவியம் வரைவது வெளிப்படையான பாலியல் செயல் என்று கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

RUPA

Next Post

தமிழகத்தில், 500 மதுபான கடைகள் மூடப்படும் வரையில் அத்துறையில் நீடிப்பாரா இவர்..??

Tue Jun 6 , 2023
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை, மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ராஜன்செல்லப்பா…. தமிழகத்தில் இரண்டு வருட திமுக ஆட்சியில் இதுவரை […]
WhatsApp Image 2023 06 06 at 17.46.58 1

You May Like