சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை ஏலத்தில் விடுங்க.. நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு..!

cow on the road

சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து பொது ஏலத்தில் விடுவதற்கு புதுச்சேரி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


புதுச்சேரி நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அடைப்பதற்கும், அபராதம் விதிப்பதற்கும் நகராட்சி ஆணையர் அல்லது அவர் நியமிக்கும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பொதுப்பணித்துறையுடன் இணைந்து பிடிக்கப்படவுள்ளன.

பிடிபடும் மாடுகள் உரிமையாளர்களுக்கு உடனடியாக திருப்பி வழங்கப்படாமல், கோசாலைகள் அல்லது கால்நடை பட்டில்களில் அடைக்கப்பட்டு, பின்னர் பொது ஏலத்தில் விடப்படும் என நகராட்சி அறிவித்துள்ளது. கால்நடைகளை வளர்ப்போர், நகராட்சியிடம் முறையான உரிமம் பெற்று, தங்களுக்கு சொந்தமான இடங்களில் பாதுகாப்பான முறையில் கால்நடைகளை வளர்க்க வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

இதை மீறும் பட்சத்தில், கண்டிப்பான நடவடிக்கையாக கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகர தெருக்களில் மாடுகள், நாய்கள் நடமாட்டம் குறித்து புகார் அளிக்க, புதுச்சேரி நகராட்சியால் தனிப்பட்ட வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: சென்னையில் பயங்கரம்..!! மாணவிக்கு மயக்க மருந்து..!! விடுதியில் ரூம் எடுத்து பலாத்காரம் செய்த பிசியோதெரப்பிஸ்ட்..!!

English Summary

Municipal Commissioner orders immediate action to auction off stray cows on the road!

Next Post

உங்கள் மொபைல் போனில் இந்த 3 செயலிகள் இருந்தால், உடனே நீக்கிவிடுங்கள்! அரசாங்கம் எச்சரிக்கை!

Mon Dec 22 , 2025
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வங்கிச் சேவைகள், ஷாப்பிங் முதல் தகவல் தொடர்பு வரை, மொபைல்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கடினம். இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவருவதால், ஆன்லைன் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணையக் குற்றங்களின் வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய சைபர் குற்ற […]
cyber security

You May Like