திமுகவை ஆட்டம் காண வைத்த முருக பக்தர்கள் மாநாடு.. ஸ்டாலின் பொய் பிரச்சாரம்.. அண்ணாமலை காட்டம்..

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

2014-15 மற்றும் 2024-25 க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்று இந்துஸ்தான் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டிருந்தது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார்.


அந்த பதிவில் “ சமஸ்கிருதத்திற்கு கோடிகள் கிடைக்கும்; தமிழுக்கும் மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் முதலைக் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!” என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்..

அவரின் இந்த பதிவுக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். அவரின் பதிவில் “திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம். திமுகவின் தொடர்ச்சியான இந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கனவே பல முறை விளக்கமளித்த மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலின் அரைத்த மாவையே நீங்கள் மீண்டும் மீண்டும் அரைப்பதனால், இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே. தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, கேரளா மாநிலத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திர மாநிலத்திலோ, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக?

யார் உங்களைத் தடுத்தார்கள்? நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 – 2014, 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ₹675.36 கோடி. தமிழுக்கு வெறும் ₹75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்? கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ₹ 11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா?” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : நடிகர் ஸ்ரீகாந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டம்.. வேறு யாருக்கெல்லாம் தொடர்பு ?

RUPA

Next Post

அதிர்ச்சி..! இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 145 பெண்கள் மீது போதை ஊசி தாக்குதல்..!!

Tue Jun 24 , 2025
பிரான்ஸில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற வருடாந்திர உலக இசை தினம் நிகழ்ச்சியில், 145 பேர் மீது போதை ஊசியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் டீன் ஏஜ் பெண்கள் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் வைத்திருந்த ஊசிகளில் ரோஹிப்னால் அல்லது GHB போன்ற பாலியல் வன்கொடுமை மருந்துகள் இருந்ததா என்பது […]
france people 1

You May Like