திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோயிலில் உள்ள முருகன் சிலை நேற்று மதியம் 12 மணியளவில் கண் திறந்ததாக கூறப்படுகிறது.. இந்த தகவல் தீயாய் பரவியது, பலரும் அந்தக் கோயிலில் குவியத் தொடங்கினர். பக்தர்கள் பலரும் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், முருகனை தரிசிக்க கோவிலில் குவிந்ததால், இந்த கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது..
சிலை கண்கள் திறக்குமா, திறக்காதா என்ற பல கேள்விகள் நம்மிடம் இருந்தாலும், அதனை நம்பி நம்பிக்கையுடன் வரும் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்டுகிறது.
Read More : பெண்களுக்கு மட்டும் 2 குலதெய்வங்கள்..!! எப்படி தெரியுமா..? இப்படி வழிபட்டால் முழு அருளும் கிடைக்கும்..!!



