”எனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது”..!! சோனியா காந்தி பரபரப்பு அறிவிப்பு..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தற்பொழுது நாட்டிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகவும் சவாலான நேரம். இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில தொழிலதிபர்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்து வருகிறது.


கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான திறமையான அரசு பெற்ற வெற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளிக்கிறது. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது அரசியல் வாழ்க்கை முடிகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இந்திய மக்கள் நல்லிணக்கம் சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தை விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது” என பேசினார்.

CHELLA

Next Post

வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 700 கிலோ 'கடல் அட்டை'! அதிரடியாக மீட்ட காவல்துறை!

Sat Feb 25 , 2023
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இவற்றைப் பதுக்கி வைத்திருந்த நபர் தப்பி ஓடி இருக்கிறார் அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. கடல் சார் உயிரினங்களில் அரிதான உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதல் போன்றவற்றால் அழிந்து வருகின்றன. இதனால் இவற்றை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடல் […]
IMG 20230225 WA0141

You May Like