கழிவு நீரேற்ற நிலைய கிணற்றில் பிணம்.! அதிர்ந்து போன ஊழியர்கள்.!

சென்னை மாநகர பகுதியில் மெட்ரோ கழிவு நீரேற்றும் நிலையத்தில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். 


தண்டையாா்பேட்டை பகுதியில் உள்ள காா்ப்பரேஷன் காலனி சேனியம்மன் கோவில் தெருவில் மெட்ரோவின் கழிவு நீரேற்றும் நிலையம் அமைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, கழிவுநீா் சேகரிக்கப்படும் கிணறு ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் வியாழக்கிழமை அன்று கிடந்துள்ளது. 

இதனை கண்ட ஊழியா்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், அங்கு வந்த புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

1newsnationuser5

Next Post

7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு.. குவைத் நாட்டிற்கு குவியும் கண்டனம்.!

Fri Nov 18 , 2022
குவைத் நாட்டில் ஒரே நாளில் ஏழு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. ஒரே நாளில் குவைத் நாட்டில் 7 நபர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, பல்வேறு குற்றங்களுக்காக இந்த தூக்கு தண்டனையானது அளிக்கப்பட்டது என்றும், தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட ஏழு நபர்களில் இரு பெண்களும் இருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், […]
hanging execution getty

You May Like