உடலில் நகக் கீறல்கள்; கடித்து வைத்த கொடூரம்!. கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவியின் மருத்துவ பரிசோதனையில் பகீர் தகவல்!.

kolkata gang rape 11zon

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முதலாமாண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மருத்துவ அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் அனைத்து கூற்றுகளும் மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் கடித்து வைத்த பற்களின் அடையாளங்கள், நகக் கீறல்கள் மற்றும் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.


மேற்கு வங்க மாநிலம் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அந்த மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மனோஜித் மிஸ்ரா (30 வயது), பிரமித் முகர்ஜி (20 வயது), ஜைப் அகமது (19 வயது) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில், மனோஜித் மிஸ்ரா முன்னாள் மாணவர். மற்றவர்கள், கல்லூரியின் தற்போதைய மாணவர்கள் ஆவர்.

குற்றத்தில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அங்கு அவர்கள் அனைவரும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். “குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் இந்த கொடூரமான சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்ததும், சம்பவம் குறித்து யாரிடமாவது பேசினால் அதை இணையத்தில் பதிவேற்றுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்,” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட மனோஜித் மிஸ்ரா என்பவர், மாணவியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் விசாரணையில் தெரியவது. கடந்த ஜூன் 25 ஆம் தேதி மாலை நடந்த இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணை செய்த தேசிய மகளிர் ஆணையம் (NCW), மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கொல்கத்தா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி வெளியானவுடன் பா.ஜ.கவினர் குற்றவாளியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் சம்பந்தப்படுத்தி சமூக வலைதளத்தில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மனோஜித்துடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் பானர்ஜி, மாநில அமைச்சர் சந்திரிமா, மம்தா பானர்ஜியின் மைத்துனியும், கவுன்சிலருமான கஜாரி பானர்ஜி ஆகியோர் இருக்கும் படங்களை பா.ஜ.க தலைவர் பிரதீப் பண்டாரி, ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல்வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Readmore: தூள்…! அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயில முன்பணம் ரூ.1,00,000 லட்சமாக உயர்வு…!

KOKILA

Next Post

முக்கிய அறிவிப்பு..! ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு...!

Sat Jun 28 , 2025
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29-ம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது […]
school 2025 2

You May Like