நிர்வாணமாக அடிப்பது.. கன்னித்தன்மை பரிசோதனைகள்.. பெண்களின் நரகமாக இருக்கும் ரகசிய சிறை.. எந்த நாட்டில் உள்ளது?

சவுதி அரேபியாவில் உள்ள டர் அல்-ரியாயா என்ற இடம் பெண்களுக்கான ரகசிய சிறையாக உள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த இஸ்லாமிய நாடாக சவுதி அரேபியா அறியப்படுகிறது. முஸ்லிம்களின் இரண்டு புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனா ஆகியவை இங்கு தான் உள்ளன.. மேலும் இந்த நாடு அரச குடும்பம், எண்ணெய் வளம் மற்றும் பெரிய கட்டிடங்களுக்கு பிரபலமானது. வெளியில் இருந்து பார்த்தால், சவுதி அரேபியா வேகமாக வளர்ந்து நவீனமாகி வருவது போல் தெரிகிறது. ஆனால் இந்த நாட்டை பற்றி மறைக்கப்பட்ட உண்மை உள்ளது.. பலருக்கும் இதுபற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை..


ஆம்.. சவுதி அரேபியாவில் உள்ள டர் அல்-ரியாயா (Dar Al-Reaya) என்ற இடம் உள்ளது. இது அதிகாரப்பூர்வமாக பெண்களுக்கான மறுவாழ்வு மையம் என்று விவரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த இடம், பெண்கள் பயங்கரமான துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒரு ரகசிய சிறை என்று கூறப்படுகிறது.

டர் அல்-ரியாயாவில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைகளை எதிர்கொள்கின்றனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.. சில முன்னாள் பெண் கைதிகளை நிர்வாணமாக நிற்க வைத்து அடிப்பதும், சூடு வைக்கப்படுவதும் போன்ற கொடுமைகள் அரங்கேறி வருகிறது..

இந்த இடம் பெண்களின் நரகம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாராந்திர கசையடிகள் மற்றும் கட்டாய மத போதனைகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல பெண்கள் கொடூரமான தண்டனைகள் மற்றும் பல துன்புறுத்தல்களை சந்தித்து வருகின்றனர்.. சிலர் இந்த இடத்திற்குள்ளேயே தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டுள்ளனர். பலர் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட வெளிப்படையாகப் பேச மிகவும் பயப்படுகிறார்கள்.

பெண்கள் ஏன் இவ்வளவு கொடூரமாக நடத்தப்படுகிறார்கள்?

டர் அல்-ரியாயா, 1960 களில் பெண்களுக்கான “புனர்வாழ்வு மையம்” என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால் பூட்டிய கதவுகளுக்குப் பின்னால், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய பகீர் தகவல்கள் பதற வைக்கின்றன.. இந்த இடத்தில் இருக்கும் பெண்களுக்கு பெரும்பாலும் சவுக்கடி வழங்கப்படுகிறது. இது கடுமையான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை அல்ல.. சில சமயங்களில் ஒரு பிரார்த்தனையை தவறவிடும் போது கூட சவுக்கடிகள் வழங்கப்படுகிறது. தங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், பெண்கள் மதப் பாடங்களில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.

டர் அல்-ரியாயாவில் அடைக்கப்பட்ட பெண்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தினரையோ, நண்பர்களையோ பார்க்கவோ அல்லது வெளி உலகத்தைச் சேர்ந்த எவருடனும் பேசவோ கூட அனுமதிக்கப்படுவதில்லை. சவுதி அரேபியாவை விட்டு தப்பி ஓடிய மரியம் அல்டோசாரியா இதுகுறித்து பேசிய போது “ எனக்கு 13 வயதாக இருந்தபோது, ​​என் தந்தை என்னை எச்சரித்தார். நான் எப்போதாவது அவருக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், அவர் என்னை நேரடியாக தார் அல்-ரேயாவுக்கு அனுப்புவார்.” என்று தெரிவித்தார்.

என்ன குற்றத்திற்காக பெண்கள் இங்கே கொண்டு வரப்படுகிறார்கள்?

பல பெண்கள் சட்டத்தை மீறியதற்காக இங்கு அனுப்பப்படுவதில்லை. மாறாக தங்கள் ஆண் பாதுகாவலர்களுக்கு எதிராக செயல்பட்டால் அல்லது அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியேறினால் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுப்பது அல்லது குடும்பம் ஏற்றுக்கொள்ளாத ஒருவருடன் உறவில் இருப்பது போன்றவற்றிற்காக அங்கு அனுப்பப்படுகிறார்கள்.

சில பெண்கள் சுதந்திரமாக வாழ முயற்சித்ததற்காக மட்டுமே அனுப்பப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பித்து கர்ப்பமாகிவிட்ட பெண்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

டர் அல்-ரியாயாவுக்குள், பெண்கள் தங்கள் அடையாளத்தை இழக்கின்றனர். அவர்கள் தங்கள் உண்மையான பெயர்களை யாரிடமும் சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு எண் வழங்கப்படுகிறது, அந்த எண்ணை வைத்து தான் அனைவரும் அந்த பெண்ணை அழைப்பார்கள்.. ஒரு பெண் தற்செயலாக தனது உண்மையான பெயரை ஒருவருடன் பகிர்ந்து கொண்டால், அவருக்கு கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது அந்த பெண்ணுக்கு நிர்வாணமாக நிற்க வைத்து சூடு வைக்கப்படுகிறதாம்.

கன்னித்தன்மை சோதனைகள்

மருத்துவ பரிசோதனை என்ற பெயரில், சிறை அதிகாரிகள் பெரும்பாலும் பெண்களை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனைகளை மேற்கொள்கின்றனர். இந்த சோதனைக்கு முன்பு பெண்களுக்கு தூக்க மாத்திரைகள், போதை பொருட்கள் வழங்கப்படுகின்றன.

எப்படி வெளியேறுவது?

ஒரு ஆணின் ஒப்புதல் இல்லாமல் டர் அல்-ரியாயாவிலிருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு பெண்ணை விடுவிக்க இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று அந்த பெண்ணின் தந்தை, சகோதரர் அல்லது கணவர் போன்ற அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் பாதுகாவலர் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்க வேண்டும் அல்லது அந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும். இரண்டு சந்தர்ப்பங்களிலும், பெண்ணின் சுதந்திரம் முற்றிலும் ஒரு ஆணைச் சார்ந்தது. யாரும் அந்த பெண்ணை வெளியே அழைத்துச் செல்ல வரவில்லை என்றால், அவள் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படலாம்.

Read More : மனிதர்கள் முதல் விலங்குகள் வரை.. பார்வையை இழந்த விசித்திர கிராமம்..!! பின்னணி இதோ..

RUPA

Next Post

எகிறி அடிக்கும் தங்கம்..!! 3 நாளில் ரூ.1,320 உயர்வு..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

Wed Jun 4 , 2025
இந்திய மக்களின் சேமிப்பில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஆட்டம் காட்டி வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்றவைகளே காரணம். இதற்கிடையே, அமெரிக்க […]
Gold Rate today 1

You May Like