நல்லகண்ணு மரணம்..!! யாரும் நம்பாதீங்க..!! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பரபரப்பு விளக்கம்..!!

Nallakannu 2025

தமிழ்நாட்டின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்த தகவல்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. 101 வயதை கடந்த இந்த மாபெரும் ஆளுமை, வயது முதிர்வு காரணமாக தற்காலிகமாகச் சந்தித்து வரும் உடல்நல சவால்கள் பெரும் பேசுபொருளாகியுள்ளன.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, ஆர்.நல்லகண்ணு நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் அவ்வப்போது ஏற்பட்டு வந்தன. இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலையில், கடந்த சில தினங்களாகச் சில பின்னடைவுகள் ஏற்பட்டன. இதனால் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்லகண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நல்லகண்ணு ஐயா அவர்களின் உடல்நிலை சில நேரங்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், தற்போது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சீராக இருந்து வருகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையின் மூத்த நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு, 24 மணி நேரமும் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தொண்டர்களும் பொதுமக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

Read More : நீட் தேர்வால் வந்த வினை..!! தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்ட மகன்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

CHELLA

Next Post

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான HPV தடுப்பூசி திட்டத்தை தொடங்கும் இந்தியா..! ஏழை பெண்களுக்கு இது எப்படி பயனளிக்கும்?

Wed Feb 25 , 2026
உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளுக்கு ஏற்ப, இந்தியா மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் தொடங்க தயாராக உள்ளது. இந்த திட்டம் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளை இலக்காகக் கொண்டது. கர்ப்பப்பை புற்றுநோய் இந்திய பெண்களில் இரண்டாவது அதிகம் காணப்படும் புற்றுநோயாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NICPR) […]
cervical cancer

You May Like