காதலியை கொன்று கூறுபோட்ட இளைஞருக்கு ’நார்கோ’ சோதனை…

தான் காதலித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கொலை செய்து டெல்லியின் வனப்பகுதியில் வீசிய நபருக்கு ’நார்கோ’ சோதனை நடத்தப்பட உள்ளது.

டெல்லியில் நடந்த கொடூரமான கொலையில் போலீசார் அஃப்தப் பூனாவாலா என்ற இளைஞரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு தகவல்களை அஃப்தாப் கூறியுள்ளான். இதை வைத்து அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணையில் தெரிவித்துள்ளான். மேலும் நீதிமன்றத்தில் போலீசார் அஃப்தாபுக்கு ’நார்கோ’ சோதனை நடத்த வேண்டும் என்று அனுமதி கோரியுள்ளனர். அலுவல் ரீதியான விசாரணைக்கு அஃப்தாப் ஒத்துழைக்க மறுக்கின்றார். சில தகவல்களை, உண்மையை அறிந்து கொள்ள இந்த சோதனை அவசியம் என தெரிவித்துள்ளனர்.


முதலில் போலீசார் விசாரணை நடத்தியபோது மே 22ம் தேதியே டெல்லியில் தங்கியிருந்த வீட்டைவிட்டு சென்றுவிட்டார் என்று தெரிவித்தார். ஆனால், போலீசார் வீட்டை சோதனை நடத்தியதில் ஷ்ரத்தாவின் பொருட்கள் வீட்டில் இருந்ததை ஏற்கனவே போலீசார் சோதனையில் பறிமுதல் செய்தனர். இது குறித்து கேள்வி கேட்டபோது அவள் தனது உடைமைகளை விட்டுவிட்டு செல்போன் மட்டும்தான் எடுத்துச் சென்றாள். என தெரிவித்தான். அவள் வீட்டை விட்டு வெளியேறிய நாள் முதல் என்னிடம் பேசவில்லை.  என கூறினார். இதையடுத்து போலீசார் போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே ஷ்ரத்தாவின் டிஜிட்டல் டிவைஸ்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். செல்போன் எங்கே இருந்தது என  தேடியபோது மெஹ்ரோலி என்ற இடத்தில் காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஷ்ரத்தாவை கொன்றதை வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளநேரிட்டது. பின்னர் 35 துண்டுகளாக்கியதும் தெரியவந்தது. போலீசார் கோரிக்கை விடுத்த நார்கோ என்ற சோதனை, ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு அவர்களிடம் இருந்து உண்மையை மட்டும் வரவைக்கும் உண்மையை கண்டறியும் சோதனையாகும். இதன் மூலம் போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து எதையும் மறைக்காமல் உண்மையை கூறுவார்கள். எனவே இந்த சோததனை நடத்தினால் எதற்காக கொலை செய்தான் என்ற உண்மை வெளியில் வரும். எனவே போலீசார் நார்கோ சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Post

நவம்பர் 19ம் தேதி இருக்குது கச்சேரி…!! வானிலை அறிவிப்பு…

Wed Nov 16 , 2022
நவம்பர் 19ம் தேதி தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது. எனவே 19ம் தேதி மற்றம் 20ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்கியது. […]
chennai rains 29102020 4 1200 0

You May Like