fbpx

50 வயது பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்..!! கூட்டு வன்கொடுமை செய்து பிறப்புறுப்பில் தாக்கிய கொடூரம்..!!

50 வயது பெண்ணை இரண்டு காவலர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வழக்கம் போல விவசாய வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள வயல் பகுதியில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குடிபோதையில் இருந்த காவல்துறையினர் இருவர் அங்கு வந்துள்ளனர். போதையில் தனியாக இருந்த 50 வயது பெண்ணிடம் அத்துமீறி அங்கேயே வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், அந்த பெண் படுகாயம் அடைந்து, அவருக்கு அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் வயலில் காயமடைந்திருந்த பெண்ணை மீட்டு தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் உறவினர் சேர்த்துள்ளனர்.

50 வயது பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்..!! கூட்டு வன்கொடுமை செய்து பிறப்புறுப்பில் தாக்கிய கொடூரம்..!!

இந்த சம்பவம் குறித்து பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட காவலர்கள் கிருஷ்ண காந்த் திவாரி, அஜய் பாரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரே இதுபோன்ற கொடூர குற்றச்செயலில் ஈடுபட்டது ஜார்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் இல்லை’..!! சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

Sat Oct 8 , 2022
கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால், வயதான காலத்தில் தங்களைக் கவனிக்காமலும், மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை […]

You May Like