fbpx

மஹாராஷ்டிராவில் கொளுந்துவிட்டெரிந்த பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

மஹாராஷ்டிராவில் அரசு பேருந்து தீப்பிடித்த நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில்இருந்து யவாத்மால் என்ற பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அவுரங்காபாத்தை நெருங்கியது. அப்போது பேருந்தின் எஞ்சினில் திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த பேருந்து ஓட்டுனர் பயணிகளை விரைவாக கீழே இறங்க அறிவுறுத்தினார்.

 உடனடியாக அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த நொடியே திகு திகுவென தீபபிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி தப்பினர். ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் தீவிபத்தில் சிக்கியிருக்க நேரிடும் என்று பயணிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் பயணிகள் பீதியடைந்தனர்.

https://www.instagram.com/reel/CkcbOF5IqEP/?utm_source=ig_web_copy_link

இது தொடர்பாக புனே போக்கவரத்து பிரிவு மேலாளர் கூறுகையில் ’’ ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டுள்ளார். எஞ்சினில் புகை வந்ததும் பேருந்தில் இருந்த பயணிகள் விரைவாக வெளியேற்றப்பட்டனர். டிரைவரும் இறங்கினார். அவுரங்காபாத் அருகே சாஸ்திரி நகர் அருகே வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பாதி பேருந்து முழுவதுமாக எரிந்தது.

Next Post

’இதுதான் கோயம்புத்தூர் குசும்பு’..!! எலான் மஸ்கிடம் Gpay நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜ்..!!

Wed Nov 2 , 2022
’ப்ளூ டிக்’ முறைக்கு கட்டணம் செலுத்த எலான் மஸ்க்கின் கூகுள் பே நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் வார்த்தைகள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசித்து வரும் வேளையில், பயனர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ’ப்ளூ டிக்’ முறைக்கு கட்டணம் வசூலிக்கும் வழிமுறை குறித்து ஆராயுமாறு […]
’இதுதான் கோயம்புத்தூர் குசும்பு’..!! எலான் மஸ்கிடம் Gpay நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜ்..!!

You May Like