fbpx

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரிப்பு!,, இளைஞர்களின் கொடூர செயல்…!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மதோடன்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சென்று வரும் போது அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை கிண்டல் மற்றும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர். இதனிடையே, கடந்த 2-ஆம் தேதி பள்ளியை விட்டு வரும் போது அந்த இளைஞர்கள் வழக்கம் போல அவரை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி, அந்த இளைஞர்களில் ஒருவரான தினேஷ் யாதவ் என்பவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதை தொடர்ந்து, அவரது நண்பர்கள் அவரை பெண்ணிடம் அறை வாங்கியவன் எனக் கூறி கேலி செய்துள்ளனர். இதனால் அவமானமடைந்த அந்த இளைஞர், மாணவியை பழிவாங்க முடிவு எடுத்தார். தனக்கு உதவியாக அவரது நண்பரான அமர் சிங்கை சேர்த்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, மாணவியை பழிவாங்குவதற்காக தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி உடல்நிலை சரியில்லாததால் மாணவி பள்ளிக்கு செல்லவில்லை. அவரது தாயார் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார், தந்தை வழக்கம் போல விவசாயப் பணிக்கு சென்றுள்ளார்.

மாணவி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதை அறிந்த தினேஷும், அமர் சிங்கும் அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு மாணவியின் வாயில் துணியை வைத்து கட்டி இருவரும் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத அவர்கள், மாணவி மீது அங்கிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். வாயில் துணி இருந்ததால் மாணவியால் சத்தம் போட முடியவில்லை. இந்த சூழ்நிலையில், மாணவியின் தந்தை மதியம் வீட்டுக்கு வந்த போது, தனது மகள் தீயில் கருகி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதை தொடர்ந்து, மாணவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக பிலிபிட் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடலில் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், அவருக்கு நேற்றுதான் சுயநினைவு திரும்பியது. அப்போது அவர், தனக்கு நடந்த கொடுமை குறித்து காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், தினேஷ் யாதவையும், அமர் சிங்கையும் காவல்துறையினர் கைது செய்தனர். மாணவியின் நிலைமை இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Baskar

Next Post

மலைப்பாம்பை மீட்க கிணற்றில் குதித்த விவசாயி பலி …உடலில் பாம்பு சுற்றிக்கொண்டதால் நீரில் மூழ்கிய பரிதாபம்…

Mon Sep 12 , 2022
கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்க நினைத்து கிணற்றில் குதித்த விவசாயி , மலைப்பாம்பு உடலில் சுற்றிக் கொண்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குட்டப்பட்டியை சேர்ந்தவர்சின்னசாமி . விவசாயியான இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது கிணற்றில் மலைப்பாம்பு விழுந்துள்ளது. இதை வெளியே எடுக்க பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் […]

You May Like