fbpx

சூட்கேசுக்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம்…. கணவர் எப்படி சிக்கினார்?

ஹரியானா மாநிலத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் துண்டு துண்டாடக நிர்வாணமாக வெட்டப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது அவரது கணவரே சிக்கினார்.

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் பகுதியில் சவுக் என்ற பகுதி உள்ளது. கடந்த திங்கள்கிழமை கேட்பாரற்று கிடந்த சூட்கேசை கைப்பற்றினர். அதன் உள்ளே நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது. இதைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

சி.சி.டி.வி. காட்சிகள் கொண்டு காவல்துறையினர் தடயங்கள் சேகரித்து விசாரணை நடத்த தொடங்கினர். சம்பவத்தன்று ஒருவர் ஆட்டோவில் வந்து சூட்கேசை வைத்தது சி.சி.டி.வி. யில் பதிவாகி இருந்தது. அந்த ஆட்டாவின் எண்ணை கண்டுபிடித்து அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிர்ஹவுல் என்ற கிராமத்தில் சவாரிக்கு வந்தததாக கூறினார். காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தியது.

இதில்அந்த நபர் ராகுல் என்பதும் கொலை செய்யப்பட்டு கிடந்தது ராகுலின் மனைவி பிரியங்கா என்பது விசாரணையில்தெரியவந்தது. 22 வயதே ஆன ராகுல் 20 வயதான பிரியங்காவை 2 ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் ஒரு குந்தை ஒன்று உள்ளது. ராகுல் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

ராகுலின் ஊதியம் தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. பிரியங்கா தன் கணவரிடம் செல்போன் கேட்டுள்ளார். அடிக்கடி டிவி வேண்டும், பிரிட்ஜ் வேண்டும் என நச்சரித்துள்ளார். இதனால் பல முறை இருவருக்குள்ளும் அடிதடிஅளவிற்கு பிரச்சனை முற்றியது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி நடந்த சண்டையில் அடித்த அடியில் பிரியங்கா எழுந்திரிக்கவே இல்லை.

இறந்துவிட்டதை அறிந்த ராகுல் குழந்தையையும் சமாளிக்க முடியாமல் பிணத்தையும் என்ன செய்வதென தெரியாமல் இரவு முழுவதும் அப்படியே இருந்துள்ளார். பின்னர் அடுத்த நாள் பெரிய சூட்கேஸ் வாங்கி , மனைவியின் உடைகளை களைந்து நிர்வாணமாக்கி சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி பூட்டினார். கையில் ராகுல் என பச்சை குத்தி இருந்ததால் அந்த இடத்தையும் வெட்டி எடுத்தார்.

பின்னர் ஆட்டோ ஒன்றை பிடித்து சத்தமில்லாமல் ஒரு இடத்தில் சூட்கேசை வைத்துவிட்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு அங்கிருந்து வேறு ஆட்டோவில் சென்றுவிட்டார். இதை ஒப்புக் கொண்ட நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனது ஒரு வயது குழந்தை உறவினர்கள் பராமரிப்பில் விடப்பட்டுள்ளது.

Next Post

புதிய புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா..?? அடுத்த 4 நாட்களுக்கு..!! மக்களே எச்சரிக்கை..!!

Thu Oct 20 , 2022
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய புயலுக்கு SITRANG என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த […]

You May Like