fbpx

பாட்டியை கொலை செய்து உடலை சிமெண்ட் வைத்து மூடிய குடும்பம்..! 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்தது பிடிக்காமல், திட்டிய பாட்டியை மகள், பேரன் உள்பட 3 பேர் கொலை செய்த சம்பவத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள கேங்கிரி சாட்டிலைட் டவுனில் வசித்து வந்தவர் சசிலேகா (50). இவருக்கு சஞ்சய் வாசுதேவ் ராவ் என்ற 27 வயது மகன் உள்ளார். சசிலேகாவின் கணவர் உயிருடன் இல்லாத நிலையில், சசிலேகாவின் தாயான 70 வயது ஷாந்தகுமாரியும் மகள் மற்றும் பேரனுடன் வசித்து வந்துள்ளார். ஷாந்தகுமாரி நம்பிக்கைகள், சடங்குகளில் தீவிர பற்று கொண்டவர். வீட்டில் முறையாக சடங்குகள் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதில்லை என மகள் மற்றும் பேரனை அடிக்கடி கடிந்து கொள்வாராம். அதேபோல், வெளியே சென்றுவந்தால் குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் வர வேண்டும், வெளி உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது என பல ரூல்ஸ்களை பாட்டி விதித்துள்ளார். இதனால், பேரன் மற்றும் பாட்டிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

பாட்டியை கொலை செய்து உடலை சிமெண்ட் வைத்து மூடிய குடும்பம்..! 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

இந்நிலையில், சம்பவ தினமான 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பேரன் சஞ்சய் வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்துள்ளார். இது பாட்டிக்கு பிடிக்காமல் பேரனை கண்டித்து திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சஞ்சய், பாட்டியை ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்துள்ளார். அப்போது அவரது தாய் சசிலேகா, சஞ்சய்யின் நண்பர் நந்தேஷும் உடன் இருந்துள்ளனர். தாக்குதலில் பாட்டி எதிர்பாராத விதமாக உயிரிழந்ததால், அதை அப்படியே மறைக்க வீட்டின் கூரையில் பாட்டியின் உடலை சிமெண்ட் வைத்து மூடி மறைத்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என பாட்டி தனது சொந்த ஊரான சிவமோகாவுக்கு சென்றுவிட்டார் என அக்கம்பக்கத்தினரிடம் சசிலேகா கூறியுள்ளார். பின்னர், அடுத்த சில மாதங்களில் சசிலேகாவும், மகன் சஞ்சய்யும் வீட்டை காலி செய்துள்ளனர். பின்னரை வீட்டை புனரமைப்பு செய்ய வீட்டின் முதலாளி வேலை செய்த போது தான் அழுகிய நிலையில் பாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பாட்டியை கொலை செய்து உடலை சிமெண்ட் வைத்து மூடிய குடும்பம்..! 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

இதையடுத்து, தடயங்களை திரட்டி விசாரணை நடத்தியதில், முதலில் சஞ்சய்யின் நண்பர் நந்தேஷ் சிக்கினார். பின்னர் நந்தேஷ் அளித்த வாக்குமூலம் மூலம் சம்பவத்தை தெரிந்துகொண்ட காவல்துறையினர், முக்கிய குற்றவாளியான சஞ்சய் மற்றும் அவரது தாயாரை தேடிவந்தனர். காவல்துறையின் நீண்ட முயற்சிக்குப் பின்னர் Know Your Customer தகவலை வைத்து மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூர் பகுதியில் தலைமறைவாக இருந்த சஞ்சய் மற்றும் சசிலேகாவை கைது செய்தனர். கொலை செய்த காலத்தில் ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் மாணவராக சஞ்சய் இருந்துள்ளார். சிறப்பாக படிக்கும் அவர், தேர்வுகளில் 90% மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால், கொலை சம்பவத்திற்கு பின் மாட்டிக்கொள்ளக்கூடாது என வேறு இடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்கி தற்போது ஹோட்டலில் வெயிட்டாரக பணியாற்றியுள்ளார். அதேபோல், தாய் சசிலேகாவும் வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வாழ்ந்து வந்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை குற்றத்தை கண்டுபிடித்த பெங்களூரு காவல்துறை கைதான 3 பேரையும் சிறையில் அடைத்துள்ளது.

Chella

Next Post

சாலையில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை..!! குடிபோதையில் செய்த காரியத்தால் கூடிய கும்பல்..!!

Thu Oct 13 , 2022
குடிபோதையில் 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பெண் ஒருவர், கணவரைப் பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். நேற்று காலை தனது 16 வயது மகளுடன் கடைக்குச் செல்வதற்காக புறப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது, இவரது மகள் கீழே நின்று கொண்டிருந்தபோது […]
சாலையில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை..!! குடிபோதையில் செய்த காரியத்தால் கூடிய கும்பல்..!!

You May Like